கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வர்த்தகதுறையிலும் சமூக சேவையிலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றவர். வசந்தகுமார் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்ததாக பிரதமர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டை முன்னேற்ற எப்போதும் ஆர்வமாக இருந்தவர் வசந்தகுமார் குடும்பத்தார், ஆதரவாளர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
Saddened by the demise of Lok Sabha MP Shri H. Vasanthakumar Ji. His strides in business and social service efforts were noteworthy. During my interactions with him, I always saw his passion towards Tamil Nadu’s progress. Condolences to his family and supporters. Om Shanti. pic.twitter.com/SmuAK8ufAx
— Narendra Modi (@narendramodi) August 28, 2020
வசந்தகுமார் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் இறந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். இன்முகத்துடன் பழகக்கூடிய இனியவர். கடின உழைப்பாலும் சலியாத முயற்சியாலும் சாதித்து காட்டிய வெற்றியாளர்.
காங்கிரஸ் கட்சியினருக்கும் வசந்தகுமார் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த ஆறுதலும் அனுதாபங்களும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொது வாழ்வுக்கு இலக்கணமாகவும் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தவர். வசந்தகுமாரின் இறப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்தகுமார் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. உறுதியான காங்கிரஸ்காரர், மக்களின் உண்மையான தலைவர் வசந்தகுமார் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்தகுமார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வசந்தகுமார் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வசந்தகுமார் மறைவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு வசந்தகுமார் இறந்தது மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
வசந்தகுமார் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். வணிகத்தில் தனக்கென தனிமுத்திரை பதித்தவர், உழைப்பு ஒன்றே வளர்ச்சிக்கு முதலீடு என நிரூபித்தவர் என்றும் டி.டி.வி கூறியுள்ளார்.
எம்.பி வசந்தகுமார் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு என்று விஜயதாரணி தெரிவித்துள்ளார்.
வசந்தகுமார் எம்.பி மறைவு இதயத்தை ஒருகணம் அசைத்துவிட்டது என்று கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். குமரியில் பிறந்து இமயம் வரை பரவிய கறுப்பு தமிழர் காலமாகிவிட்டார் என்று வைரமுத்து கூறியுள்ளார். வசந்தகுமார் உழைப்பு தேனீ, ஓயாக் கடல், அடித்தட்டு மக்களின் அன்பர். பூமிக்கு வந்துபோன வசந்தமாய் போய்விட்டார் என்று கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
அனைவரிடத்திலும் அன்பாக பழக கூடியவர் வசந்தகுமார் எம்.பி என்று புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சமூகத்துக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற தீரா நல்லெண்ணம் கொண்ட அவரது மரணம் பேரிழப்பு என்று கூறியுள்ளார்.